தமிழ்நாட்டில் தொழில்துறை கார்பன் குறைப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் சன்சூர்; டேசுங் ஆட்டோபார்ட்ஸ் மற்றும் & இல்காங் ஆட்டோமோட்டிவ் நிறுவனங்களுடன் பிபிஏகளில் கையெழுத்து
தென்கொரிய வாகன உற்பத்தி நிறுவனங்களின் தமிழ்நாட்டு ஆலைகளுக்குத் தூய்மையான எரிசக்தியை வழங்க, மொத்தம் 8 எம்டபிள்யுபி சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது
சென்னை, இந்தியா, March 7, 2026 /PRNewswire/ -- பசுமை ஆற்றலுக்கு மாறிவரும் முன்னணி நிறுவனங்கள் மற்றும் மின் பயன்பாட்டு அமைப்புகளுக்கு இந்தியாவின் விருப்பத்திற்குரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை வழங்கும் சன்சூர் எனர்ஜி, தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள டேசுங் குரூப்-இன் இந்திய துணை நிறுவனமான Daeseung Autoparts India Private Limited மற்றும் அதே குழுமத்தைச் சேர்ந்த கொரிய வம்சாவளி நிறுவனமான இல்காங் ஆட்டோமோட்டிவ் ஆகியவற்றுடன் நீண்ட கால சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களில் (பிபிஏ) கையெழுத்திட்டுள்ளது.
டேசுங் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, சன்சூர் எனர்ஜி தனது தமிழ்நாட்டின் இளையான்குடியில் உள்ள 75 எம்டபிள்யுபி சூரிய மின் நிலையத்திலிருந்து டேசுங் நிறுவனத்தின் காஞ்சிபுரம் ஆலைக்கு ஆண்டுதோறும் சுமார் 8 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வழங்கும். இந்த ஒப்பந்தம் டேசுங் ஆட்டோபார்ட்ஸ் இந்தியா தனது மொத்த மின் தேவையில் 60% வரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்ய அனுமதிக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 5,800 மெட்ரிக் டன் CO2e உமிழ்வு குறைக்கப்படும். இந்த கூட்டாண்மை, உலகளாவிய வாகன விநியோகச் சங்கிலியில் டேசுங் குழுமத்தின் தலைமைத்துவத்தையும், அதன் இந்திய உற்பத்திச் செயல்பாடுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இணைப்பதன் மூலம் நிலைத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இது தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி உற்பத்தி நிறுவனங்களுக்கு சன்சூர் எனர்ஜி ஒரு சிறந்த பங்காளியாக இருப்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இதேபோல், இல்காங் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்திற்காக, சன்சூர் தனது இளையான்குடி சூரிய மின் நிலையத்திலிருந்து அவர்களின் காஞ்சிபுரம் ஆலைக்கு சுமார் 4.7 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வழங்கும். இது இல்காங் நிறுவனம் ஆண்டுக்கு 3,400 மெட்ரிக் டன் CO2e உமிழ்வைக் குறைக்க உதவும்.
இந்தக் கூட்டாண்மை குறித்து டேசுங் ஆட்டோபார்ட்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. ஷின் சங்க்கி கூறுகையில்: "டேசுங் எப்போதும் பொறுப்புணர்வுடன் கூடிய முன்னேற்றத்தையே நம்புகிறது. சன்சூர் எனர்ஜியுடனான எங்கள் ஒத்துழைப்பு, குழுமத்தின் உலகளாவிய நிலைத்தன்மை இலக்குகளுடன் எங்களது இந்திய செயல்பாடுகளை இணைக்க அனுமதிக்கிறது. எங்களது மின் தேவைகளில் கிட்டத்தட்ட 60%-ஐ சூரிய ஆற்றல் மூலம் பெறுவதன் மூலம், எங்களது கார்பன் தடயத்தை கணிசமாகக் குறைப்பதோடு, எதிர்கால எரிசக்தி செலவு ஏற்ற இறக்கங்களுக்கு எதிரான எங்களது வலிமையையும் அதிகரிக்கிறோம். சன்சூர் எனர்ஜியின் வலுவான தொழில்துறை நற்சான்றிதழ்கள், நிரூபிக்கப்பட்ட செயல்பாட்டுத் திறன், சரியான நேரத்தில் மின்சாரம் வழங்குதல் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள ஆழமான வளர்ச்சி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களை நாங்கள் பங்காளியாகத் தேர்ந்தெடுத்தோம்."
சன்சூர் எனர்ஜியின் நிறுவனர் - தலைவர் மற்றும் சிஇஓ Mr. Shashank Sharma கூறுகையில்: "எங்களது வளர்ந்து வரும் உலகளாவிய உற்பத்தி வாடிக்கையாளர் பட்டியலில் டேசுங் ஆட்டோபார்ட்ஸ் இந்தியா மற்றும் இல்காங் ஆட்டோமோட்டிவ் ஆகியோரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சன்சூர் மீது டேசுங் வைத்துள்ள நம்பிக்கை, மிகவும் மதிக்கப்படும் தொழில்துறை நிறுவனங்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட, உறுதியான, 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை வழங்குவதற்கான எங்களது திறனை உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்னேற்றத்திற்கும், வணிகங்கள் தடையின்றி பசுமை மின்சாரத்திற்கு மாறுவதற்கும் சன்சூர் உறுதிபூண்டுள்ளது."
தமிழ்நாட்டில், சூரியசக்தி, காற்றாலை மற்றும் பிஇஎஸ்எஸ் ஆகிய துறைகளில் 1,100 மெகாவாட்டிற்கும் அதிகமான 'தடையற்ற' (ஆர்டிசி) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டங்களுடன், நிறுவனம் தனது கால்தடத்தை சீராக விரிவுபடுத்தி வருகிறது. தனது முதன்மை முன்முயற்சியான #TamilNattinSakthi மூலம் மாநிலத்தின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்துகிறது - இது மாநிலத்தின் தொழில்துறைகள் மற்றும் வளர்ச்சியை நிலைத்தன்மையுடன் மேம்படுத்த தூய்மையான, நம்பகமான, 24 மணி நேர மின்சாரத்தை வழங்குகிறது.
பல மாநிலங்களில் காற்றாலை, சூரியசக்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு நிலையங்களைக் கொண்டுள்ள சன்சூர் எனர்ஜி, நாடு முழுவதும் உள்ள வணிக மற்றும் தொழில்துறை C&I வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற தூய்மையான மின்சாரத்தை வழங்குகிறது.
சன்சூர் எனர்ஜி பற்றி
2014-ல் தொடங்கப்பட்ட சன்சூர் எனர்ஜி, முன்னணி வணிகங்கள் மற்றும் பயன்பாட்டு அமைப்புகளுக்கு இந்தியாவின் விருப்பத்திற்குரிய 24 மணி நேர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும். ஒரு முன்னணி சுதந்திர மின் உற்பத்தியாளராக (ஐபிபி), சன்சூர் நிறுவனம் சூரியசக்தி, காற்றாலை மற்றும் பேட்டரி சேமிப்புத் தீர்வுகளின் மூலம் தடையற்ற தூய்மையான எரிசக்தி (ஆர்இ-ஆர்டிசி) வழங்கி, இந்தியாவின் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் 100% மின் தேவையையும் பூர்த்தி செய்துகொள்ள உதவுகிறது. நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் (பிபிஏகள்) மூலம் நிறுவனங்கள் எளிதாகவும் நம்பிக்கையுடனும் தூய்மையான எரிசக்திக்கு மாற இது வழிவகுக்கிறது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தொழில்துறை கார்பன் குறைப்பு நிறுவனத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக, பார்ட்னர்ஸ் குரூப் ஏஜி நிறுவனம் சன்சூரில் 400 மில்லியன் டாலர் ஈக்விட்டி முதலீட்டை வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 700 மெகாவாட் செயல்பாட்டு சொத்துக்கள் மற்றும் 7.10 ஜிகாவாட் வளர்ச்சி நிலையில் உள்ள திட்டங்களுடன், 2030-க்குள் 10 ஜிகாவாட் என்ற இலக்கை நோக்கி சன்சூர் பயணித்து வருகிறது. இந்தியாவின் மின்சக்தி மாற்றத்தை முன்னெடுக்கவும் உறுதிபூண்டுள்ளது. https://sunsure-energy.com
லோகோ: https://mma.prnewswire.com/media/2491395/Sunsure_Energy_Logo.jpg
Share this article