மும்பை, April 19, 2017 /PRNewswire/ --
மக்கட் தொகையியல் வீட்டு வசதி குறித்த நிகழ்காலப்போக்கு மலிவு விலை வீட்டுத்துறைக்கான தேவைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் மேற்கொண்டு 9 கோடி தனிவீடுகள் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. நகரமயமாக்கல், மக்கட்தொகைப் பெருக்கம், மற்றும் ஒரு சராசரிக் குடும்பத்தின் அளவு குறைந்து வருதல் ஆகியவை இந்த அதிகரிக்கும் தேவைக்கான முக்கிய காரணங்கள். 2020 ஆம் ஆண்டுக்குள் வீட்டுமனை வணிகத்துறையின் வளர்ச்சி 112% ஆக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
(Logo: http://mma.prnewswire.com/media/470753/XRBIA_Logo.jpg ) )
60 சதுர மீட்டருக்கு குறைவான அளவில் குடியிருப்பு வீடு வாங்க முனைவோருக்கு ரூபாய் 2.5 இலட்சம் மான்யமாக வழங்கும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் மூலம் அரசாங்கம் தலையிட்டு மலிவு விலை வீடுகளின் சந்தைப் பிரிவுக்கு ஊக்கமளிக்கிறது.
2016 ஆம் ஆண்டு 3776 வீடுகளை வழங்கிய எக்ஸெர்பியா மட்டுமே இந்த ஊக்கத்துக்கு எதிர்வினையாற்றுகிறது. மும்பை பெருநகர வளர்ச்சிப் பகுதி(மும்பை மெட்ரோபொலிடன் ரீஜியன்) மற்றும் புனே பகுதி ஆகியவைகளில் தனக்கென ஒரு இடத்தை நிறுவிய இந்த நிறுவனம் 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு விற்பனையை எட்டும் குறிக்கோளைக் கொண்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்குள் 8776 வீடுகளை விற்பனை செய்த எக்ஸெர்பியா இந்த வருடம் 24 திட்டங்களை தொடக்கவிருக்கிறது, அதன் மொத்த எண்ணிக்கை 50,000 வீடுகளாகவும் மதிப்பு ரூபாய் 10,000 கோடிகளாகவும் அமையும்.
எக்ஸெர்பியா தனது நூதன முயற்சியான "வருமானச் சான்றிதழ் தேவையற்ற" வீட்டுக்கடன் திட்டத்தின் வழியாக தனது தனித்தன்மையை நிலைநாட்டியிருக்கிறது. இந்தத் திட்டம் விண்ணப்பதாரர்கள் வருமானச் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லாமலேயே நிதிக்கான விண்ணப்பத்தை அளிக்க உதவுகிறது. மேலும் இதற்கு 20 வீட்டு நிதி நிறுவனங்கள் ஆதரவு அளிக்கின்றன. இது இந்தியாவிலுள்ள முறைசாராத் துறையிலுள்ளவர்களுக்கு வீட்டு உரிமையாளராகும் வாய்ப்பு அதிகரிக்கச் செய்கிறது.
இந்தியாவிலுள்ள 40 நகரங்களை இணைக்கும் வீட்டுமனைத் தரவுகள் மற்றும் பகுப்பாய்வுத் தளத்தை தன்னகத்தே கொண்ட முன்னனி நிறுவனமான ப்ரோப் ஈக்விட்டி தனது சமீபத்திய ஆய்வில் எக்ஸெர்பியாவை மலிவு விலைச் சந்தையின் முன்னணி நிறுவனமாக அடையாளம் கண்டு உறுதி செய்திருக்கிறது. "மலிவு விலை குடியிருப்புப் பிரிவில் (உம். ரூ.25,இலட்சத்துக்கும் கீழே) ,வீட்டுமனைக் கட்டிட வளர்ச்சியில் இந்திய அளவில் ஏப்ரல் 2016 லிருந்து டிசம்பர் 2016 வரை சற்றேறக்குறைய 2900 குடியிருப்புகளை விற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எக்ஸெர்பியா தலைமையிடத்துக்கு முன்னேறியுள்ளது."
ஏற்கனவே மலிவு விலை குடியிருப்பு மனை சந்தையில் நிலைத்து நின்ற நிறுவனங்கள் 20 இலட்சத்துக்கும் குறைந்த மதிப்புள்ள வீடுகளின் சந்தை நிலவரத்தை மந்தமான வேகத்திலேயே எதிர்கொண்டன. அதன் காரணமாக விரைவாக நகரமயமாகும் பகுதிகளில் உருவான தேவைகளின் எண்ணிக்கை உற்பத்திக்கெட்டா உயரத்துக்குச் சென்றுவிட்டது. உதாரணமாக பூனோ, மற்றும் மும்பை மற்றும் பெருநகரப் பகுதிகளில்( மெட்ரோபொலிடன் ரீஜியன்) 20 இலட்சத்துக்கும் குறைந்த மதிப்புள்ள வீடுகளின் தேவைகள் உற்பத்தியை விட சுமார் 35 % அதிகமாக இருக்கிறது..
2020 ஆண்டுக்குள் 9 கோடி தனிவீடுகள் அதிகப்படியாகத் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ள இந்நிலை மலிவு விலை குடியிருப்புப் பிரிவு வீட்டு மனைச் சந்தைக்கு உந்துகோலாகத் திகழும். மலிவு விலை குடியிருப்புப் பிரிவுச் சந்தை கொண்டுள்ள ஆற்றல் வளத்தை அடையாளம் கண்டு மற்ற வீட்டுமனை வசதிப்பிரிவினரும் இந்தச் சந்தையில் காலூன்றுகிறார்கள். உற்பத்தி சீரான வளர்ச்சி அடையும் நிலையில் இதன் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அதிகரிக்கும் தேவைகளுக்கு ஏற்ப ஒரு இணக்கமான வீட்டுக் கடன் திட்டத்தையும் , ஒருங்கிணைந்த கட்டமைப்பையும் உருவாக்கும் போட்டியில் ஈடுபடுவர்.
Media Contact:
Namrata Aswani
[email protected]
+91-9920710261
Business Head PR
ITW Consulting
Share this article